தேதி: 26.10.1957
காலை இன்பம்
நீலக்கடலின் பரப்பு - அதிலே
நில்லாதிரையின் அழைப்பு
கொலக்கதிரோன் எழுச்சி - ஆண்டு
கொட்டும் பொன்னிறக் காட்சி;
சாலதிருமீன் ஆட்டம் - மேலே
கழுகின் பெருமித நோட்டம;
சூலைத் தாங்கிய நந்து - அங்குச்
சிந்திய சீதள முத்து;
ஆங்கே ஒரு மணிப்பொய்கை - அதிலே
அலர்ந்த கமலத் திருக்கை;
ஓங்கென வண்டின் நாதம் - அவைக்கு
உண்டோ மலரில் பேதம்;
பாங்கியர் சூழப் பெண்டிர் - அதிலே
பனிநீர் கோடல் கண்டிர;
மாங்கிலை வாழுங் குயிலின் - இன்பத்
தீன்குரல் வருவது மங்கே
முல்லைக்காடு அங்கே - மணம்
சுமந்தத் தென்றல் இங்கே;
கல்லைதுளைக்கும் வீழ்ச்சி - இன்பக்
கானம பாடும் அருவி;
புல்லை விளைத்த பைந்தரை - குளிர்
புயலைசுமந்த பெருவெளி;
நெல்லை விளைத்த செந்நிலம் - இவையே
நற்காலை இன்பக்கட்சி!
-சே. பா. உமாபதி
Labels: Poems, S.B.Umapathy, Tamil